நிலவிடம் சொல்லிவிட்டேன்
உன் தூக்கத்தை
கலைக்க விருப்பமின்றி
வந்து விட்டது...!
மேகங்களை அனுப்பிவிட்டேன்
உன்னைப் பின்தொடர
முடியாமல்
கலைந்து விட்டது...!
குயில்களை தூதுவிட்டேன்
உன் குரலைக்
கேட்டு
மயங்கி விட்டது...!
என் இதழ்கள் சொல்லும்
என நினைத்தேன்
தயங்கி தயங்கி
தவிக்கின்றது...!
இறுதியாக...
என் எழுத்துக்களை
நம்பி இருக்கிறேன்
இதாவது உன்னிடம்
கூறட்டும்
உன் மீது
எனக்குள்ள அன்பினை...