Monday 17 September 2012

தூது



நிலவிடம் சொல்லிவிட்டேன் 
உன் தூக்கத்தை 
கலைக்க விருப்பமின்றி
வந்து விட்டது...!

மேகங்களை அனுப்பிவிட்டேன்
உன்னைப் பின்தொடர
முடியாமல்
கலைந்து விட்டது...!

குயில்களை தூதுவிட்டேன்
உன் குரலைக் 
கேட்டு
மயங்கி விட்டது...!

என் இதழ்கள் சொல்லும் 
என நினைத்தேன் 
தயங்கி தயங்கி
தவிக்கின்றது...!

இறுதியாக...
என் எழுத்துக்களை 
நம்பி இருக்கிறேன்
இதாவது உன்னிடம்
கூறட்டும்

உன் மீது
எனக்குள்ள அன்பினை...

Friday 14 September 2012

ஊடல்



என்மீது அன்பே இல்லை
 என நான் தொடரும் ஊடலில்...


 உன் தவிப்பு காட்டிவிடுகிறது
 என்மேல் உனக்கு இருக்கும் அன்பை...

Wednesday 5 September 2012

நிலா


மேகங்கள் தேடிய
தேடல் நீயே...!

கண்கள் விரும்பிய
காட்சியும் நீயே...!

முகம்மட்டும் காட்டும் 
      தமிழ்த்தாய் மகளே...!

உன்அழகை ரசிக்கவே 
      இரவும் தோன்றியதோ...!

கவிஞர்கள் வர்ணித்த
      அழகின் உருவே...!

நீ உலாவரும்பாதை 
      விண்ணென்று ஆனதோ...!

பௌர்ணமியே உன்னைக்கண்டபின் 
      கடல்அலையும்  எழுமே...!

உன்முகம் பார்த்தே 
      அல்லியும் மலர்ந்ததே...!

விண்ணழகு மேலும் 
      கூடியது உன்முகத்தால்...!

உன்னைக்காணாமல் சென்றதால் 
      சூரியனும் வருந்துமோ...!

உன்னழகுக்கு கோடி 
      விண்மீன்களும் ஈடாகுமோ...!

உன்அழகைப்பாட வார்த்தைகள்தேடி 
      முடிந்தது அகராதி...!

Monday 3 September 2012

பொய் என எண்ணி

உந்தன் நியாயங்களால் எந்தன்
கனவுகள் உயிரற்று போய்விட்டது...

நீ மறுத்து கூறிய வார்த்தைகளால்
என் வார்த்தைகள் மௌனம் ஆனது...

நீ நிராகரித்த நொடி
உலகத்தையே நிராகரிக்க தோன்றியது...


எனினும் ...

உன் வார்த்தைகள் பொய் என எண்ணி 
சமாதானம் செய்து கொண்டேன் 
இந்த உலகத்தோடு 
உன்னையும் பிரியக்கூடும் என்பதால்...