நேற்று மாலை வெகு வேளைக் காத்திருந்தேன்
என்னிடம் விடை பெற்றுச் செல்வாய் என்று....
விடை பெறலாம் என்றே உத்தேசித்தேன்
ஆனால் என் பின்னாலே வந்து விடுவீரோ
என்ற ஐயம் தான் என்னைத் தடுத்து விட்டது ...
உன் பின்னால் ஏன் வரப் போகின்றேன்
உன்னுடன் அல்லவா நடந்து வருவேன்...
ஓ அதற்கு ஐயப்படக் கூடாதா...
எவரேனும் பார்த்தால் தெரியும்...
யார் பார்த்தால் என்ன உன் வழித் துணையாக
வரக் கூடவா உரிமையற்றுப் போய்விட்டேன்...
தங்களிடம் வாதிட்டு என்னால்
வெல்ல இயலாது .