ஆற்றங்கரை மலர்வெளியில்
மலர் கொய்ய வந்தவள்
ஏன் என் மனம் கொய்து சென்றாள்??
என் பார்வைகள் எல்லாம்
அவள் பிம்பமாய் தோன்றிட
மாயம் என்ன செய்தாள்??
வாய் மொழி பேசாது
விழி மொழி பேசாது
எவ்வாறு என்னை மௌனமாக்கினாள்??
பாடசாலை நடத்தாமல்
ஏடுகள் கற்றுக் கொடுக்காமல்
எப்படி என்னை கவியாய் மாற்றினாள்??
No comments:
Post a Comment