Sunday 30 December 2012
Thursday 20 December 2012
பிரிவு
தொலை தூரப் பயணத்திலும்
தொலையாமல் உன் நினைவுகள் ...
சப்தம் நிறைந்த கானகத்திலும்
செவியில் உன் வளையொலிகள்...
காரிருள் சூழ்ந்த போதிலும்
மனதினில் உன் ஒளிமுகம்...
கண்ணயர்ந்து உறங்கினாலும்
கனவினில் உன் தோற்றம்...
என் வரவினை எதிர்நோக்கி நீ அங்கே
உனை சேர துடிக்கும் நான் இங்கே...
நம் இடைவெளிகள் தீர்ந்திடட்டும்
நம் இதயங்களின் வலி உணர்ந்து ....
Monday 17 December 2012
Thursday 13 December 2012
Tuesday 11 December 2012
ஈரேழு உலகிலும் உன் புகழே!!!
மனிதரில் பேதம் பார்த்து
ஒதுக்கி வைக்கும் கூட்டம்தனில்
பறவைகளையும், காடு மலைகளையும்
நம் இனம் என்றீர் ...!
அதிகார பயம்கொண்டு
வாழ்ந்தோரையும்
நீர் அச்சமில்லை எனப்பாடி
வீரம் வளர்த்தீர் ...!
இல்லச் சிறையிலிருந்து
மாதரை விடுவித்த
முதல் தூண்டுதல்
உமது கவிதைகளே ...!
எமதர்மரும்
உம் புகழ் உணர்ந்தே
எருமை வாகனத்தில் வராது
யானை வாகனத்தில் வந்து
உம்மை விண்ணுலகம்
சேர்த்தார் போலும்...!
Tuesday 4 December 2012
Sunday 2 December 2012
Subscribe to:
Posts (Atom)