தொலை தூரப் பயணத்திலும்
தொலையாமல் உன் நினைவுகள் ...
சப்தம் நிறைந்த கானகத்திலும்
செவியில் உன் வளையொலிகள்...
காரிருள் சூழ்ந்த போதிலும்
மனதினில் உன் ஒளிமுகம்...
கண்ணயர்ந்து உறங்கினாலும்
கனவினில் உன் தோற்றம்...
என் வரவினை எதிர்நோக்கி நீ அங்கே
உனை சேர துடிக்கும் நான் இங்கே...
நம் இடைவெளிகள் தீர்ந்திடட்டும்
நம் இதயங்களின் வலி உணர்ந்து ....
No comments:
Post a Comment