Tuesday 11 December 2012

ஈரேழு உலகிலும் உன் புகழே!!!


மனிதரில் பேதம் பார்த்து 
ஒதுக்கி வைக்கும் கூட்டம்தனில் 
பறவைகளையும், காடு மலைகளையும் 
நம் இனம் என்றீர் ...!

அதிகார பயம்கொண்டு 
வாழ்ந்தோரையும் 
நீர் அச்சமில்லை எனப்பாடி
வீரம் வளர்த்தீர் ...!

இல்லச் சிறையிலிருந்து 
மாதரை விடுவித்த 
முதல் தூண்டுதல் 
உமது கவிதைகளே ...!

எமதர்மரும்
உம் புகழ் உணர்ந்தே 
எருமை வாகனத்தில் வராது 
யானை வாகனத்தில் வந்து 
உம்மை விண்ணுலகம் 
சேர்த்தார் போலும்...!

2 comments: