Sunday 2 December 2012

உயிருடன் எரிகின்றேன்


கடும் வெய்யிலில் 
நிழலின்றி 
உணவின்றி 
நீரின்றி 
தவித்த நிலையிலும் ....

இதழ் வறண்டு 
வயிறு ஒட்டி 
கண்ணீர் வற்றி 
உறக்கம் இன்றி 
பசி தாங்கமுடியாப் பொழுதிலும் ....

உயிர் வளர்த்துவிட்டேன் ...!


மகனே,
உன் பசி அழுகையிடம் 
என் தாய்ப்பாலும் வற்றியதென்று 
உணர்த்த இயலாமல்
உயிருடன் எரிகின்றேன் ....


1 comment: