மேகங்கள் தேடிய
தேடல் நீயே...!
கண்கள் விரும்பிய
காட்சியும் நீயே...!
முகம்மட்டும் காட்டும்
தமிழ்த்தாய் மகளே...!
உன்அழகை ரசிக்கவே
இரவும் தோன்றியதோ...!
கவிஞர்கள் வர்ணித்த
அழகின் உருவே...!
நீ உலாவரும்பாதை
விண்ணென்று ஆனதோ...!
பௌர்ணமியே உன்னைக்கண்டபின்
கடல்அலையும் எழுமே...!
உன்முகம் பார்த்தே
அல்லியும் மலர்ந்ததே...!
விண்ணழகு மேலும்
கூடியது உன்முகத்தால்...!
உன்னைக்காணாமல் சென்றதால்
சூரியனும் வருந்துமோ...!
உன்னழகுக்கு கோடி
விண்மீன்களும் ஈடாகுமோ...!
உன்அழகைப்பாட வார்த்தைகள்தேடி
முடிந்தது அகராதி...!
arumaiyai irukku pa.. :)
ReplyDelete