Monday 3 September 2012

பொய் என எண்ணி

உந்தன் நியாயங்களால் எந்தன்
கனவுகள் உயிரற்று போய்விட்டது...

நீ மறுத்து கூறிய வார்த்தைகளால்
என் வார்த்தைகள் மௌனம் ஆனது...

நீ நிராகரித்த நொடி
உலகத்தையே நிராகரிக்க தோன்றியது...


எனினும் ...

உன் வார்த்தைகள் பொய் என எண்ணி 
சமாதானம் செய்து கொண்டேன் 
இந்த உலகத்தோடு 
உன்னையும் பிரியக்கூடும் என்பதால்...

7 comments: