நடு இரவில் ஏதோ
பயத்தில் அலறும்போதெல்லாம்
உன் உறக்கம் தொலைத்து
என்னை உறங்க வைத்தாய்...
எதை எதையோ போட்டு
சமைத்து விட்டேன் அம்மா
எனக்கூறும் தருணங்களில்
அருமை என அழகாய் பாராட்டுவாய்...
விடியல் கூட அறியாமல்
அயர்ந்து தூங்கும் தருணங்களில்
தட்டி எழுப்பாமல்
போர்வையைப் போர்த்திவிட்டு செல்வாய்...
மனம்வாடி பொய் புன்னகையில்
ஏமாற்ற எண்ணிய பொழுதெல்லாம்
மடியில் படுக்கவைத்து
ஆறுதல் மொழி கூறுவாய்...
மாற்றங்கள் நிறைந்த உலகினில்
மாறாமல் கிடைத்த
அழகிய பரிசு
உன் அன்பு மட்டும் தாயே !!!
Nice ka!!!
ReplyDeletevery nice ka...:)
ReplyDeletekavithai remba nall irukku... !!
ReplyDelete