என்னைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல
என்னை எனக்கே புரிய
வைக்கவும் நீ வேண்டும்..
என்னை தட்டிக் கொடுக்க மட்டுமல்ல
தவறுகள் செய்யும்வேளை என்னை
கண்டிக்கவும் நீ வேண்டும்..
என் வேலைகளுக்கு உதவியாய் மட்டுமல்ல
என்னை வேலை செய்ய விடாமல்
தொல்லை தரவும் நீ வேண்டும்..
தாய்மையோடு அரவணைக்க மட்டுமல்ல
நான் செல்லம் பாராட்ட
சிறு பிள்ளையாகவும் நீ வேண்டும்..
என்னுடன் கைகோர்த்து நடக்க மட்டுமல்ல
நான் செல்லும் பாதையில்
வழித்துணையாகவும் நீ வேண்டும்..
என் இன்பத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல
என் துன்பத்தில் தோள்கொடுத்து
ஆறுதல் சொல்லவும் நீ வேண்டும்..
Nalla irukku pa... :)
ReplyDeleteNalla iruku pa... :)
ReplyDeletesuberb ka:)
ReplyDeleteNice kavithai .....da
ReplyDeleteVery nice ka:)
ReplyDelete