Sunday 30 December 2012

மயிலினமே


மயிலினமே,
உன் விரல் தீண்டியே 
புளித்த பழங்களும் 
இனிக்கிறது...

உன்னருகே நின்றிட 
மயில்களின் அழகும்
பொய்மையானது...

உன் செவ்விதழ் மொழிகேட்டு 
குயில்களும் இசைக்க 
யோசிக்கிறது...

அவைகள் படும்பாடு 
போதவில்லையா...
என்னையும் வதைக்காதே 
உன் ஒர விழி பார்வையால்...

1 comment: