Sunday, 30 December 2012
Thursday, 20 December 2012
பிரிவு
தொலை தூரப் பயணத்திலும்
தொலையாமல் உன் நினைவுகள் ...
சப்தம் நிறைந்த கானகத்திலும்
செவியில் உன் வளையொலிகள்...
காரிருள் சூழ்ந்த போதிலும்
மனதினில் உன் ஒளிமுகம்...
கண்ணயர்ந்து உறங்கினாலும்
கனவினில் உன் தோற்றம்...
என் வரவினை எதிர்நோக்கி நீ அங்கே
உனை சேர துடிக்கும் நான் இங்கே...
நம் இடைவெளிகள் தீர்ந்திடட்டும்
நம் இதயங்களின் வலி உணர்ந்து ....
Monday, 17 December 2012
Thursday, 13 December 2012
Tuesday, 11 December 2012
ஈரேழு உலகிலும் உன் புகழே!!!
மனிதரில் பேதம் பார்த்து
ஒதுக்கி வைக்கும் கூட்டம்தனில்
பறவைகளையும், காடு மலைகளையும்
நம் இனம் என்றீர் ...!
அதிகார பயம்கொண்டு
வாழ்ந்தோரையும்
நீர் அச்சமில்லை எனப்பாடி
வீரம் வளர்த்தீர் ...!
இல்லச் சிறையிலிருந்து
மாதரை விடுவித்த
முதல் தூண்டுதல்
உமது கவிதைகளே ...!
எமதர்மரும்
உம் புகழ் உணர்ந்தே
எருமை வாகனத்தில் வராது
யானை வாகனத்தில் வந்து
உம்மை விண்ணுலகம்
சேர்த்தார் போலும்...!
Tuesday, 4 December 2012
Sunday, 2 December 2012
Friday, 12 October 2012
Monday, 17 September 2012
தூது
நிலவிடம் சொல்லிவிட்டேன்
உன் தூக்கத்தை
கலைக்க விருப்பமின்றி
வந்து விட்டது...!
மேகங்களை அனுப்பிவிட்டேன்
உன்னைப் பின்தொடர
முடியாமல்
கலைந்து விட்டது...!
குயில்களை தூதுவிட்டேன்
உன் குரலைக்
கேட்டு
மயங்கி விட்டது...!
என் இதழ்கள் சொல்லும்
என நினைத்தேன்
தயங்கி தயங்கி
தவிக்கின்றது...!
இறுதியாக...
என் எழுத்துக்களை
நம்பி இருக்கிறேன்
இதாவது உன்னிடம்
கூறட்டும்
உன் மீது
எனக்குள்ள அன்பினை...
Friday, 14 September 2012
Wednesday, 5 September 2012
நிலா
மேகங்கள் தேடிய
தேடல் நீயே...!
கண்கள் விரும்பிய
காட்சியும் நீயே...!
முகம்மட்டும் காட்டும்
தமிழ்த்தாய் மகளே...!
உன்அழகை ரசிக்கவே
இரவும் தோன்றியதோ...!
கவிஞர்கள் வர்ணித்த
அழகின் உருவே...!
நீ உலாவரும்பாதை
விண்ணென்று ஆனதோ...!
பௌர்ணமியே உன்னைக்கண்டபின்
கடல்அலையும் எழுமே...!
உன்முகம் பார்த்தே
அல்லியும் மலர்ந்ததே...!
விண்ணழகு மேலும்
கூடியது உன்முகத்தால்...!
உன்னைக்காணாமல் சென்றதால்
சூரியனும் வருந்துமோ...!
உன்னழகுக்கு கோடி
விண்மீன்களும் ஈடாகுமோ...!
உன்அழகைப்பாட வார்த்தைகள்தேடி
முடிந்தது அகராதி...!
Monday, 3 September 2012
Thursday, 30 August 2012
மாறாதது உன் அன்பு மட்டும்
நடு இரவில் ஏதோ
பயத்தில் அலறும்போதெல்லாம்
உன் உறக்கம் தொலைத்து
என்னை உறங்க வைத்தாய்...
எதை எதையோ போட்டு
சமைத்து விட்டேன் அம்மா
எனக்கூறும் தருணங்களில்
அருமை என அழகாய் பாராட்டுவாய்...
விடியல் கூட அறியாமல்
அயர்ந்து தூங்கும் தருணங்களில்
தட்டி எழுப்பாமல்
போர்வையைப் போர்த்திவிட்டு செல்வாய்...
மனம்வாடி பொய் புன்னகையில்
ஏமாற்ற எண்ணிய பொழுதெல்லாம்
மடியில் படுக்கவைத்து
ஆறுதல் மொழி கூறுவாய்...
மாற்றங்கள் நிறைந்த உலகினில்
மாறாமல் கிடைத்த
அழகிய பரிசு
உன் அன்பு மட்டும் தாயே !!!
Wednesday, 29 August 2012
நீ வேண்டும்
என்னைப் புரிந்து கொள்ள மட்டுமல்ல
என்னை எனக்கே புரிய
வைக்கவும் நீ வேண்டும்..
என்னை தட்டிக் கொடுக்க மட்டுமல்ல
தவறுகள் செய்யும்வேளை என்னை
கண்டிக்கவும் நீ வேண்டும்..
என் வேலைகளுக்கு உதவியாய் மட்டுமல்ல
என்னை வேலை செய்ய விடாமல்
தொல்லை தரவும் நீ வேண்டும்..
தாய்மையோடு அரவணைக்க மட்டுமல்ல
நான் செல்லம் பாராட்ட
சிறு பிள்ளையாகவும் நீ வேண்டும்..
என்னுடன் கைகோர்த்து நடக்க மட்டுமல்ல
நான் செல்லும் பாதையில்
வழித்துணையாகவும் நீ வேண்டும்..
என் இன்பத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல
என் துன்பத்தில் தோள்கொடுத்து
ஆறுதல் சொல்லவும் நீ வேண்டும்..
Subscribe to:
Posts (Atom)